Friday, August 8, 2008

இனியெல்லாம் சுகமே!!



வீழ்வதிலும் ஒரு எழுச்சி
அருவி
அழுவதிலும் ஒரு மகிழ்ச்சி
மழை
அடிப்பதிலும் ஒரு அழகு
அலை
மடிவதிலும் ஒரு உயிர்த்தல்
விதை
உதிர்வதிலும் ஒரு உயர்வு
மலர்
வலியுடன் ஒரு வாழ்க்கை
அந்தோணிமுத்து
என்றாலும்
இன்று ஸ்வர்க்கத்தின் மடியில்..
வாழ்வின் இனிமையில்....
சுதந்திரக் காற்றின் சிரிப்பில்....
இனியெல்லாம் சுகமே!!
இது நிறைவேற உதவிய
அன்பு மனங்களைஇங்கே
மலர்களால் பூஜை செய்கிறோம்.......
வினயமான விஷி
சினேகமான சுரேஷ்
பாசமுள்ள பாலா
செல்லச் சீனா அய்யா
மனித உருவில் கடவுள்கள்.......
கோவில்களில் இல்லை தெய்வங்கள்....
மனித மனங்களில் அவை.......
எனக்கு நீ வேண்டும் இப்போதே!
உலகின் எங்கோ ஓரிடத்தில்ஒரு கடையில் நானும்...!
அதே உலகின் ஏதோ ஒரு மூலையில்...
நான்கு சுவர்களுக்குள் நீயும்...!
நம்மை ஒன்றாக இணைக்கப் போவது யாரு?
உன்னோடு நானும்...என்னோடு நீயும்...
இணைந்து சுற்றப் போகும் இடங்கள்
எல்லாம்நமக்காக காத்திருக்கிறதே...
எப்போ எப்போவென்று?
எப்போ? எப்போ?
உன்னை என் மடியில் இருத்திசுகமாய்த்
தாலாட்டிநான் நலம் காணும்
நாளும்எதுவோ? எதுவோ?
25 வருட ஏக்கம் போதாதா?
இன்னுமா நாம் இணையும் நாள் வரவில்லை?
இனி ஒரு நாள் நீயின்றி நகராது...!
எனக்கு நீ வேண்டும் என்அந்தோணி முத்துவே!!
எனக்கு நீ வேண்டும்
இன்றே...!இப்போதே.......!
இப்படிக்கு,கதறி அழும்...
உன்சக்கர நாற்காலி....

மார்ச் 19.......நீ இப்படித்தானே அழுதாய்???
இதோ இணைத்து விட்டோம்....
இனியெல்லாம் சுகமே!!!!

இவர்கள் இணைய உதவிய அன்பு மனங்களை
இங்கே மலர்களால் பூஜை செய்கிறோம்.......
வினயமான விஷி
சினேகமான சுரேஷ்
பாசமுள்ள பாலா
செல்லச் சீனா அய்யா
மனித உருவில் கடவுள்கள்.......
கோவில்களில் இல்லை தெய்வங்கள்....
மனித மனங்களில் அவை.......

Thursday, May 22, 2008

சிறகில்லா தேவதைகள்
இந்த வலைப் பூ எதற்காக?
உங்களுக்கு உள்ள கஷ்டங்களை,வலிகளை
இதில் பின்னூட்டங்களாக அளியுங்கள்.
எங்களிடம் சிறகில்லா தேவதைகளின் கூட்டம் உள்ளது.
அவை உங்களின் காயங்களுக்கு மருந்தாகவும்
வழிகளுக்கு மயிலிறகாகவும்
ஒரு மின்னஞ்சல் மூலமாகவோ
பின்னூட்டங்களாகவோ அல்லது ஈர மனங்களை
இணைக்கும் சில நல்ல உள்ளங்களை
உங்களுடன் இணைக்கும் வேலையையோ
செய்வார்கள் ...
இந்த சிறகில்லா தேவதைகளின் கூட்டத்தில்
உங்களையும் இணைத்துக் கொள்ளலாம்...
உங்கள் இணைய முகவரியும்
கொடுத்தால் நன்று....

Friday, May 9, 2008

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம்....

நல்லதை நாலு பேருக்குச் சொல்வோம் www.bharatbloodbank.com இந்த வெப்சைட்டில் எந்த வகையான ரத்த குரூப்பும் தேவைப்பட்டால் உடனே ஆயிரக்கணக்கான ரத்த தானம் செய்பவர்களின் முகவரிகள் கிடைக்கும். இந்த விஷயத்தை உடனடியாக தெரிந்தவர்களுக்கெல்லாம் சொல்லவும். எங்கேயோ எப்போதாவது யாருக்காவது இந்த செய்தியால் உங்களையறியாமலே உதவிக் கொண்டு இருப்பீர்கள்.............

சேர்ந்தே அனுபவிப்போம்......

எங்கள் இதய நிழலின்
குடையின் கீழ்
உங்கள் வலிகளை
இறக்கி வைத்து
சற்றே இளைப்பாறுங்கள்.....
வலியோ??...வாழ்வோ??
வாருங்கள் சேர்ந்தே
அனுபவிப்போம்....

அன்புடன் நாங்கள்

Tuesday, May 6, 2008

Gaze upon life with the same passion...............

We don't have time.
As we run with the
routine of life.........
we forget to see
the passers with pain...
We never like to miss that minute wasted
on a human being who expect
a "hello"
He will die.....
as dry leaves fall on ground,
as figs die in autumn,
We as usual shed a few drops of tears...
And gaze upon life with the same passion..

We have taken up the task of.............

A person needs love and care
at the same moment,
when he is in pain...
He needs a shoulder to cry with..
He needs a heart to talk to...
to share his feelings...
And a "hello" will give
a life to the loner.
It takes years and years
to give and gain that love and care.
We have taken up the task of
giving and gaining of that love and care.......