வீழ்வதிலும் ஒரு எழுச்சி
அருவி
அழுவதிலும் ஒரு மகிழ்ச்சி
மழை
அடிப்பதிலும் ஒரு அழகு
அலை
மடிவதிலும் ஒரு உயிர்த்தல்
விதை
உதிர்வதிலும் ஒரு உயர்வு
மலர்
வலியுடன் ஒரு வாழ்க்கை
அந்தோணிமுத்து
என்றாலும்
இன்று ஸ்வர்க்கத்தின் மடியில்..
வாழ்வின் இனிமையில்....
சுதந்திரக் காற்றின் சிரிப்பில்....
இனியெல்லாம் சுகமே!!
இது நிறைவேற உதவிய
அன்பு மனங்களைஇங்கே
மலர்களால் பூஜை செய்கிறோம்.......
வினயமான விஷி
சினேகமான சுரேஷ்
பாசமுள்ள பாலா
செல்லச் சீனா அய்யா
மனித உருவில் கடவுள்கள்.......
கோவில்களில் இல்லை தெய்வங்கள்....
மனித மனங்களில் அவை.......
